முதலீடு இருந்தால் போதும்,
மூளை இல்லை என்றாலும்,
அனைவருக்கும் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்.
அதனால் தான்!
மூப்பு அடிப்படையில் முட்டாள்களை உருவாக்க
முன் வருகிறார்கள் முதல் நிலைப்பள்ளியிலே!
என்றும்,
இவர்களுக்கு ஏற்றமடைந்த நிகழ்காலம்.
ஏழை,
குழந்தைகளுக்கு ஏமாற்றமடைந்த எதிர்காலம்.
முக்காலமும் முளைவிடுகிறது மூலதனம்,
தனியார் பள்ளிகளில்.

No comments:
Post a Comment