பணத்தை மையப்படுத்தி சுழலும்
இப்பூமியில்,
'பணம்'
இருப்பவன் இரக்கமற்றவானாக மாறுகிறான்,
இல்லாதவன் பொல்லாதவனாக மாறுகிறான்,
பாசத்தை பாதாளத்திற்கு அனுப்புகிறது,
அன்பை ஆகாயத்திற்கு அனுப்புகிறது,
சிந்திப்பவனை செயலிழக்கச் செய்கிறது,
சாதிப்பவனை சாதாரண மனிதனாக்குகிறது,
நல்ல எண்ணங்கள் நசுக்கப்பட்டு,
தீய எண்ணங்கள் திலகமிட்டு
வரவேற்கிறது.
இப்படி,
பணத்தை
முதலிடப்படுத்திய-'முதலாளித்துவம் '
என்று மாறும் - 'சமத்துவம்'.























