Tuesday, November 29, 2011

பணம்



பணத்தை மையப்படுத்தி சுழலும்
இப்பூமியில்,

'பணம்'
இருப்பவன் இரக்கமற்றவானாக மாறுகிறான்,
இல்லாதவன் பொல்லாதவனாக மாறுகிறான்,

பாசத்தை பாதாளத்திற்கு அனுப்புகிறது,
அன்பை ஆகாயத்திற்கு அனுப்புகிறது,

சிந்திப்பவனை செயலிழக்கச் செய்கிறது,
சாதிப்பவனை சாதாரண மனிதனாக்குகிறது,

நல்ல எண்ணங்கள் நசுக்கப்பட்டு,
தீய எண்ணங்கள் திலகமிட்டு
வரவேற்கிறது.

இப்படி,
பணத்தை
முதலிடப்படுத்திய-'முதலாளித்துவம் '
என்று மாறும் - 'சமத்துவம்'.





முதலாளித்துவ நாடு





கல்வி நிறுவனங்கள்
தொழிலாளர்களை உருவாக்கும் - தொழிற்சாலைகள்.

கலைஞர்களும் அறிஞர்களும்
காசுக்கு வேலை செய்யும் - வேலையாட்கள்.

அனைத்து உறவுமுறைகளும்
பணபரிமாற்ற - உறவுமுறைகள்.

இப்படி,
மூலதனத்தை முதன்மைப்படுத்தி,
பணியாற்ற வைக்கும்
தொழில் நிறுவனமாக
மாறி வருகிறது நமது நாடு.

"முதலாளித்துவ நாடு"



குணங்களின் போராட்டம்





முதலாளித்துவ வர்க்கத்தில்,


பேராசை பிடித்தவனும்,


சுயநலம் கொண்டவனும்,


உருவாகிறார்கள் முதலாளிகளாக.




.
எத்தனை பேரை நசுக்கி நிமிர்ந்தான் !



என்பதை மறந்து,முத்திரை கொடுக்கிறோம்,



'சாதித்தவன்' என்று.







அனைவரும் சாதிக்க,


,
போராடும் போராட்டத்தில்.




தோல்வி அடைகிறது,

,
அனைத்து நல்ல குணங்களும்.




வெற்றி பெறுகிறது,


எல்லா தீய குணங்களும்.




குவிகிறது குப்பைகள்,


மனித மனங்களில். 


சாதனைகள்





ஆசிரியரின் சாதனை!
மற்றதை மங்கச்செய்து மார்க் வாங்கவைப்பது.

மாணவரின் சாதனை!
மனப்பாடம் செய்து மார்க் வாங்குவது.

கல்லுரியின் சாதனை!
அனைவரையும் அலுவலகப் பணியில் அமர்த்துவது.

இளைஞர்களின் சாதனை!
மன்றாடி மாத சம்பளத்தில் அமர்வது.

பெற்றோரின் சாதனை!
மனை கட்டி,மணம் முடித்து வைப்பது.

இப்படி,
சாதாராண நடைமுறைகள் சாதனைகளாக ..!
சாதனைகள் பழைய வரலாறாக ..!

Sunday, November 27, 2011

மனங்களின் மாற்றம்







பார்த்ததும் அடைய துடிப்பது,
ஆண்களின் மனம்.
பார்க்காமலே தோற்றத்தில் கவர்வது,
பெண்களின் குணம்.

அன்று பெண்களை கண்டால்
காதல் மலர்ந்தது.
இன்று பெண்களை கண்டால்
காமம் வளர்கிறது.

அன்றைய ஆண்களின் காதலில் மறைந்திருந்தது
சிறிய காமம்.
இன்றைய ஆண்களின் காமத்தில் மறைந்திருக்கிறது
சிறிய காதல்.

மாறியது,

ஆண்களின் நடைமுறையா?
பெண்களின் உடை முறையா?

அன்பின் ஆயுள்





கண்டதும் காதல் வயப்படுவது-பின்பு
கண்டதில் குறை தேடி,

அலுத்துப் போய்,
அடுத்த காதலுக்கு ஆயுத்தமாவது.

இப்படி,

அன்பிற்கும் ஆயுள் குறைகிறது
அவசர உலகத்தில்.

கலாச்சாரக் கலவரம்




பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும்
மேலை நாட்டு கலாச்சார மயக்கத்தில்,

காதல்,காமம் மட்டும் மங்கலாக தெரிகிறது
நமது கலாச்சாரத்தில், இதை...

கள்ளகாதல் கொலைகளாக தினமும்
காண்கிறேன் நாளேட்டில்,

பண்படாத மனதிற்கு எப்படி புரியும்
நமது பண்பாடு!

கரைசேராத மனதிற்கு எப்படி தெரியும்
நமது கலாச்சாரம்!

Saturday, November 26, 2011

மிரட்டும் மின்காந்த அலைகள்




வார்த்தைகள் வரைமுறை இல்லாமல்
வஞ்சிக்கின்றது.,

இரகசியங்கள் இரவு பகலாக
இரணகளமாகிறது.,

காலம் கணக்கு இல்லாமல்
கரைகிறது.,

செல்போனில் மின்காந்த அலைகளாக .......

Friday, November 25, 2011

இளைய சமுதாயம்




முதிர்ச்சி அடையாமல் உதிரும்,
முடவர்களாக மாறும் அளவுக்கு,

அறியாமையை,

கோழைத்தனத்தை,
விவேகமற்ற வேகத்தை,
வீரமற்ற கோபத்தை,
பண்படாத மனதை,
அமைதியில்லாத அன்பை,
கற்று கொடுத்தவர்கள் யார்?

பெற்றோர்களா?

ஆசிரியர்களா?
சூழ்நிலையா?

இல்லை

சாதாரண &தவறான விஷயங்களை மிகைப்படுத்தி காண்பிக்கும் சினிமாவா?

"விளக்க முடியவில்லை
என் இளைய சமுதாயத்தின் நிலையை"

Thursday, November 24, 2011

ஆரம்ப பள்ளி அவலங்கள்





முதலீடு இருந்தால் போதும்,
மூளை இல்லை என்றாலும்,
அனைவருக்கும் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்.

அதனால் தான்!

மூப்பு அடிப்படையில் முட்டாள்களை உருவாக்க
முன் வருகிறார்கள் முதல் நிலைப்பள்ளியிலே!

என்றும்,
இவர்களுக்கு ஏற்றமடைந்த நிகழ்காலம்.

ஏழை,
குழந்தைகளுக்கு ஏமாற்றமடைந்த எதிர்காலம்.

முக்காலமும் முளைவிடுகிறது மூலதனம்,
தனியார் பள்ளிகளில். 

சமுதாய வரிகள்






1.படித்தவர்கள் பயம் அறிந்தவர்கள்
2.படிக்காதவர்கள் பயம் அறியாதவர்கள்.

1.நல்லவர்கள் சுயநலவாதிகள்
2.கெட்டவர்கள் பொதுநலவாதிகள்.

1.வேலை உள்ளவன் அவனை மட்டும் பார்ப்பான்
2.வேலை இல்லாதவன் அடுத்தவனை மட்டும் பார்ப்பான்.

1.அறிவுள்ளவர்கள் அலுவலர்கள்
2.அறிவற்றவர்கள் அரசியல்வாதிகள்.

"தலைவர்கள் "
இரண்டாம் வரியில் உள்ளவர்கள்.

"தவிப்பவர்கள் "
முதல் வரியில் உள்ளவர்கள்.

கரிமச் சேர்மங்கள்






கரிமச்சேர்மங்ளின் தொகுப்பில்
இயக்கம் உள்ளவரை,

எத்தனை ? எத்தனை ?
இன்பங்களும் - துன்பங்களும்!
காட்சிகளும் - கலவரங்களும்!
அரவணைப்புகளும் - அறுத்தெறிப்புகளும்!
போராட்டங்களும் - பொறாமைகளும்!
இயக்கம் நின்று போனால்,

இறுதியில் இருப்பது,

'கார்பன்' மட்டும் தான் - உடன்
பிணைந்து இருக்கும் அணுக்களும்
பிரிந்து விடுகின்றன.

சுடுகாட்டு எரிமேடையில்
"மனித உடம்பு"

மன ஆளுமை




அறிவியல் வளர்ச்சியில்
அகப்பட்ட மனங்களுக்கு.

தெரிவதெல்லாம் தெளிவற்ற-பிம்பங்கள்,
அறிவதெல்லாம் அமைதியில்லா-ஆசைகள்,
உணர்வதெல்லாம் உருவமற்ற-மேகங்கள்,

குவியப்படுத்த முடியாத மனக்கதிர்கள்
குமுறும் மனிதர்கள்.

அகிலத்தையும் தாண்டி அண்டத்தை,
ஆள புறப்பட்ட நாம்!
ஆள மறந்துவிட்டோம்

'மனதை'

வழிமாறும் பயணம்






வறுமையில் கல்வி கற்பதை,
வெறுக்கச் செய்கின்றது கல்வி சூழ்நிலை.

வெறுப்படைய வைக்கிறது ஊடகச் சூழ்நிலை .

நழுவிப் படுகின்றனர் நடுநிலைப் பள்ளியிலே!!

பின்பு,
வளர்கிறார்கள்
அறிவிலும்,
அந்தஸ்திலும்,
வறுமை கோட்டுக்கு கீழ்....

வசதி உள்ளவர்கள்
தூக்கி எறியும் சக்கையாக!!!

வன்முறையாளனாக!!!

மாறியுள்ள கல்வி குணம்





கல்வியினால் மட்டுமே ஒருவனை,
'மிருக குணத்தில்' இருந்து,
'மனித குணத்திற்கு' மாற்ற முடியும்.ஆனால்,

இன்று,
'மனித குணத்தில்' இருந்து
'எந்திர குணத்திற்கு' மாற்றுவதற்காக கல்வி
மாறியுள்ளது.

Wednesday, November 23, 2011

ஒடுக்கப்பட்ட உணர்வுகள்





அதிகார வர்க்க சமுதாயத்தில்
அண்டி பிழைப்பதற்கே !!
ஆயிரம் போராட்டங்கள் - இதில்
ஆள்பவர்களின் அறிவினத்தையும்,
அபகரிப்பவர்களின் ஆணவத்தையும்,
ஆராய்ந்து அறிவது எப்படி?

வயிற்றுக்கே வதைப்படும் போது
வழக்காடுவது எப்படி?

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில்,
உயர்த்தப்பட்ட உணர்வுகள்,
கலம் காணாத கனவுகள்.

எல்லை மீறும் இயற்கை




பரிணாம வளர்ச்சியில்,
பகுத்தறிவு பெற்ற மனிதன்,
பாடாய்படுத்துகிறான் இயற்கையை.

அளவுக்கு அதிகமான ஆசையால்,
அபகரிக்கிறான் இயற்கையின் அனைத்தையும்,

அள்ளி வழங்குகிறது வஞ்சனை இல்லாமல்-அதுவும்,
அளவுக்கு அதிகமாக,
மழை,வெயில்,குளிர், என்று.

எல்லை மீறுகிறது இயற்கையும்,
மனிதர்களை போல.

Tuesday, November 22, 2011

ஆள்பவர்களின் தந்திரம்



நடைபாதையில் நகர்கிறது வாழ்க்கை பாதை.

சிதைந்து போன உடையில்,

மறைந்துள்ளது-சிதைய போகும் உடல்.


அரசு அரிசியில் இருக்கும்,

அரைகுறைச் சத்தையும்,

எடுத்துக்கொள்கிறது-இரவில் கொசு.


வேதனைகளைகூட தாங்க,

வலிமை இல்லாமல்,

வலிகளுடன் வாழ்கையை வழிநடத்தும்-பெண்கள்.


தனது மனைவி மக்களின்

துயரக்கண்ணீரை

துடைக்காமல் மதுவில் மூழ்கிப்போன ஆண்கள்!


இப்படி?


வதைப்படும் வாக்காளர்களின் எண்ணிக்கையை,

அதிகப்படுத்தினால் தான்!

அடுத்து ஆட்சிக்கு வரமுடியும்.


அனைவருக்கும் அனைத்தும் கொடுத்துவிட்டால்!

ஆள்வது எப்படி?

மாய போர்க்களம்



பணப் பேய்களின்,

போலி சதுரங்கக்- கட்டத்தில்

சாதாராண மக்களின் போராட்டம்.

தான் பொம்மை என்று அறியாமல்,

ராஜா என்றும்!

ராணி என்றும்!

நகருகிறார்கள் - குறுகிய கட்டத்திற்குள்.

நகர்த்துகிறார்கள் - காசு படைத்தவர்கள்.

ஆட்டுவிப்பது யார் என்று,

அறியாமல் அருகில் உள்ளவர்களிடம்,

போட்டிகளால்,

பொறாமைகளால்,

போரிடுகிறார்கள்-மாய

போர்க்களத்தில்.

Monday, November 14, 2011

பசுமை இல்ல விளைவு




வாட்டி வதைக்கும் வெயில் காலத்தில்,


,
மின்சாரம் துண்டிக்கப்பட்ட நடு இரவில்,



புழுக்கத்தில் போர்வைக்குள் வரும்,



வியர்வை போல,



வருகிறது மழை.



கார்பன் டை ஆக்சைடு என்னும்



போர்வையால் போர்த்தப்பட்ட பூமியில்.









போர்த்தியதும் நாமே!!



புலம்புவதும் நாமே!!

















Sunday, November 13, 2011

போட்டிச் சமுதாயம்


உள்ளத்தை வளப்படுத்தும் கல்வியில்
போட்டி!
உடலை வளப்படுத்தும் விளையாட்டில்
போட்டி!
போதாது என்று தொலைக்காட்சிகள் உருவாக்கும்
போட்டிகள் பல,

வெற்றி பெறுபவர்
மாய புகழ் மயக்கத்தில் தள்ளப்படுகிறார்கள்.


தோல்வி அடைபவர்
தவறானஎண்ணங்களுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இப்போட்டிச் சமுதாயத்தில்
வெற்றி பெறுபவர் சிலரே,


அதனால்,
அதிகரிப்பது தவறான எண்ணங்களே!

அறியாமை திரை


நம் அறிவை மறைத்திருக்கும்
அறியாமை திரையை அகற்றும் வரை.

தனி மனிதனை,

சமுதாயத்தை,

திரைபோட்டு சீரழித்து கொண்டிருக்கின்ற..
சின்னத்திரையையும்,

பெரியத்திரையையும்,
அகற்ற முடியாது.

Saturday, November 12, 2011

நாகரிக மனிதர்கள்


நிகழ்காலத்தில் வாழ்வதை
நினைவு படுத்தவும்,

பொது அறிவு திறனை
புலப்படுத்தவும்,

அவர் அவர்களின் நாகரிகத்தை
அறிவுறுத்தவும்,

பயன்படுவது.

புதிய சினிமா மற்றும்
புதிய கிரிக்கெட் போட்டி பற்றிய
விவாதங்களும்,
கருத்துக்களும்,

இரண்டையும் அறியாதவர்கள்
கற்கால மனிதர்களா

உறவுகளுக்குள் யுத்தம்


நவீன மஹாபாரத யுத்தமா
உறவுகளுக்கு இடையே நடக்கும்
சண்டைகளும்,
கொலைகளும்.

எப்படி வந்தது பூ போன்ற
மனதில் போர் வெறி,

இதற்கு காரணம்!

தான் தான் என்ற எண்ணமா?
பணமா?
போலி கௌவுரவமா?

தனிமை




உறவுகளும்,சுற்றங்களும்,தங்களை தனிமைப்படுத்தி கொண்டிருக்கின்றன.ஆனாலும்!

சேமித்து கொண்டிருக்கின்றன.ஒருவர் மற்றொருவரின்
"
தவறுகளையும்,
எதிர்மறை குணங்களையும்" மட்டும்.

பிரபஞ்சம் விரிவடைகிறது,ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்று கொண்டிருக்கின்றன மனிதர்களைப் போல.....

பரிதவிப்பு



பணமா !     பாசமா !
காதலா !    காமமா !
நட்பா !     நாடகமா !


என்று!


பிரித்தரிய முடியாமல்
பரிதவிக்கின்றன.


இன்றைய,

cell phone-ம்
computer -
ம்