Friday, March 29, 2013

மிருகங்கள் சிரிக்கிறது

சுயநலமா இருப்பது, 
விட்டுகொடுகாதது ,
பொறாமைபடுவது,
மறுகணம் தவறாக நினைப்பது,
சந்தேகப்படுவது,
நம்பிக்கை இல்லாதது,
ஏமாற்றுவது, 
சண்டை போடுவது,
கொள்ளை அடிப்பது, 
கொலைசெய்வது ,
அடிமை படுத்துவது,
துன்புறுத்துவது ,
போன்ற அனைத்தையும் வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு

மனிதர்கள் என்றும்
ஆறறிவு படைத்தவர்கள் என்றும்

கூறுவதை கேட்டு
மிருகங்கள் சிரிக்கிறது

மக்களின் வெகுளித்தனம்

அறிவியல்,வரலாறு,மொழி,கலாச்சாரம் ,பண்பாடு,போன்ற 
அனைத்தும், 80% தமிழக மக்களுக்கு கற்றுக்கொடுப்பது 
சினிமா மற்றும் டிவி தான்,

இது சினிமாவின் வெற்றி என்பதா? 
இல்லை 
மக்களின் வெகுளித்தனம் என்பதா?

Wednesday, March 27, 2013

நாய் பொழப்பு



அடிமையா இருக்கனும்,
சுயநலமா இருக்கனும்,
ஏதாவது ஒரு வழியில் பணம் சம்பாதிக்கனும்,
எந்திரம் போல வேலை செய்யனும்,
போலியாய் நடிக்கனும்,
சகமனிதர்களை ஏமாற்றனும்,
ஆடம்பர பொருட்களின் மோகத்தில் மூல்கனும்,
நவீன நாகரிக நாடோடிகளாக இருக்கனும்,
அனைவரும் பொறாமைபடும்படி இருக்கனும்-இதில்

எதுவும் இல்லாதவனை - சமூகம்
சாட்டையில் அடிக்கிறது !
தனிமை படுத்துகிறது !
ஒதுங்கி போனாலும் உதைகிறது !
மனநோயாளியா மாற்றுகிறது !
குடும்பம் இல்லை !
பெற்றோரே புறம் தள்ளும் போது மணைவி எப்படி கிடைபால் !

மேலே கூறிய நற்குணங்கள்
இல்லாத இளைஞர்களுக்கு இவுலகம் இல்லை

கீதை,குரான்,பைபிள் சொன்னது
திருவள்ளுவர் சொன்னார்
காந்தியடிகள் சொன்னார்
ஔவையார் சொன்னார்
அவன் சொன்னான் இவன் சொன்னான்-னு
எவனாவது போனிங்க சோத்துக்கு வழியில்லாம
தெருதெருவா அலையவேண்டியதுதான்.

Friday, March 22, 2013

சிந்தனை துளி


"நம் மனதை நோகடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் 
நம் எண்ணங்களில் உருவாகி
மற்றவர்கள் மூலமா நம்மை தாக்குகிறது 
அதனால் 
நல்வழிபடுத்துவது 
நமது எண்ணங்களையும், மனதையும் தான்,
அடுத்தவர்களை அல்ல"

"சுயநல சூழ்நிலையில் 
நாமும் சுயநலமா இருந்தாதான் 
சோறு கிடைக்கும் போல"

அண்ணன் என்னடா ! 
தம்பி என்னடா ! 
அவரசமான உலகத்திளே !-70களில் 
பெத்தவங்க என்னடா ! 
பிள்ளையங்க என்னடா ! 
கார்பிரேட் உலகத்திளே ! -இன்று

"உடல் பலவீனமும்"
"மன அழுத்தமும்" - தான் 
வளர்ந்துள்ளது நமது பொருளாதார வளர்ச்சியில்

ஊராரிடம் நல்ல பேர்வாங்க 
உனது வாழ்கையை பணையம் வைக்காதே
கஷ்டப்படுவது நீதான்,ஊரார் இல்லை

அன்பானவர்களிடம் அதிகம் எதிர்பார்கதே 
குறைவது அன்பாக இருந்தாலும் 
விலகுவது நீயாகத்தான் இருப்பாய்

கடந்தகால இன்பங்களின் 
நினைவுகள் தான் உருமாறுகிறது 
நிகழ்காலத்தில் ஆனந்த கண்ணீராக

என்று உடல் உழைப்பு குறைந்ததோ 
அன்றே மன உழைப்பு வளர தொடங்கிவிட்டது

தேவை அதிகமாகி போயிடுச்சி
வாழ்க்கை தொலைஞ்சி போயிடுச்சி

எந்திரங்களோடு பழகிய மனிதன் உறவுகளையும் 
எந்திரமாய் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறான்.

ஒரு இடத்தில் தேவைக்கு அதிகமாகவும் 
ஒரு இடத்தில் தேவைக்கு குறைவாகவும்
இருப்பது இயற்கையாய் உருவான பொருள் மட்டுமல்ல 
மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளும் தான்


Tuesday, March 19, 2013

முதல் வணக்கம்

எனது தமிழ் மாணவர்களிடம் உள்ள
அறிவும்,
வீரமும்,
விடாமுயற்சியும்,
கொண்டு உலகத்தையே வெல்லலாம்,
அனால்
மானம் கெட்ட அரசியல்வாதிகளாலும்,
தரங்கெட்ட கல்வி முறையாலும்,
தனியார் நிறுவனங்களின் வியாபார பொருளாக மாறிய கல்வியாலும்,
சுயநலம் கொண்டு காசு சம்பாதிக்கும் அரசு ஆசிரியர்களாலும்,
ஊரை ஏமாற்றும் ஊடகங்களாலும்,
ஏமாற்ற பட்டு திசை தெரியாமல் இருந்தவர்கள்,
வழிநடத்த ஆளில்லாமல் விழித்தவர்கள்,
இன்று
தகவல் தொழில்நுட்பத்தின் பலனாக
தன் சுய முயற்சியினால் அவர்களாகவே அறிவு ஆயுதம் ஏந்தி
தளபதி இல்லாத போர்வீரர்களை போல்
போராடும் மாணவர்களை
வாழ்த்துவதை விட
வணங்குவதே மேல்,

Sunday, March 17, 2013

அகத்தால் அடிமைகள்

நவீன ஏகாதிபத்தியத்தில்
நாம் எல்லாம்

நாகரிக நாடோடிகள்,
அகத்தால் அடிமைகள்,
பந்த பாசம் அற்ற பரதேசிகள்,

எல்லாற்றையும் விட
எதையும் சிந்திக்காத கற்சிலைகள்

Thursday, March 14, 2013

என்ன செய்ய????

மாணவர்கள் போராட்டத்துக்கு
நேரில் சென்று
ஆதரவு கொடுக்கலாம்,
ஊக்குவிக்கலாம்,
அவர்களுடன் போராடலாம்,
வழிகாட்டலாம்,
இன்னும்,
எத்தனையோ சமுக சீர்கேடுகளுக்காக இதேபோல் போராடலாம்,
அரசியல்வாதிகளின் முகமூடிகளை அகற்றலாம்,

என்ன செய்ய????
வார ஒருநாள் விடுமுறைக்கு
அடுத்த வாரத்திற்கு ஆயுத்தம் ஆகா நேரம் பத்தாது ,

ஒருநாள் விடுப்பு எடுத்தால் சம்பளம் இல்லை,

வாரம் ஆறு நாட்களும் தன்னை பற்றிகூட யோசிக்க முடியாது,

தூக்கம்,சாப்பாடு,உடை,கழிப்பறை,அனைத்தும் அவர்கள் கண்காணிப்பில்,

பெத்தவங்க உசுரு போற நிலைமையில் இருந்தாகூட அனுமதி பெற்று வரவேண்டும்,

கணினி கூட சில நேரங்களில் நமது ஆணையை மீறும்,
நாம் மீற முடியாது அவர்களின் ஆணைக்கு.

அன்பு,பாசம்,குடும்பம், எல்லாம் நேரங்கள் ஒதுக்கப்பட்டு,நிமிடங்களில் நடக்கிறது,

பெற்றோர்,பிள்ளைகளை விடுதிகள் விழுங்குகின்றன,

இவற்றை எல்லாம் சாதாரணமா எடுத்துக்கொண்ட மனங்களும் இருக்கின்றன,

என்ன செய்ய????

விவசாயத்தை பெருக்கலாம்,
சில்லறை வணிகத்தை அதிகரிக்கலாம்,
கூட்டுறவு சந்தை அதிகபடுத்தலாம்,
குடிசை தொழில் பெருக்கலாம்,
உண்மையான கல்வி கொடுக்கலாம்,
கிராமத்தை வளர்ச்சி அடைய செய்யலாம்,
அந்த அந்த துறையில் ஆராய்ச்சி அதிகபடுத்தலாம்,

இவற்றை எல்லாம் விடுத்தது,

பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வந்து
பாதாளத்தில் தள்ளிவிடார்களே
படுபாவி அரசியல்வாதிகள்,

எல்லோரும் எந்திரங்களாக மாறிவிடார்களே!
என்ன செய்ய????

Tuesday, March 12, 2013

நோக்கும் நுட்பம்



அடுத்தவன் பிரச்னையை தொலைநோக்கி மூலம் பார்கிறோம்,
நமது பிரச்னையை நுண்நோக்கி மூலம் பார்கிறோம்,
அதனால் தான்.
அடுத்தவன் துன்பத்துக்கு ஆறுதல் கூறுகிறோம்,
நமது துன்பத்துக்கு ஆறுதல் தேடுகிறோம் ,
பார்க்கும் கருவியை மாற்றி பயன்படுத்திப்பார்
நாமும் துன்பப்படமாட்டோம்.
அடுத்தவர்களும் துன்பப்படமாட்டார்கள்.

Monday, March 11, 2013

போலிகளின் ஆட்சி

உண்மையை ஏற்றுகொள்ள முடியாத,
உண்மையை சகித்துக்கொள்ள முடியாத,
மனங்களை கொண்ட சூழ்நிலையில்,
போலிகள் தான் ஆட்சி செய்யும்,
அழிவுக்கு தான் வழிவகுக்கும்

Sunday, March 3, 2013

தாய் உணர்வு





தனது குடும்பம்,தனது ஊர்,
தனது மாநிலம்,தனது நாடு,
தனது மொழி,தனது இனம்,
தனது தொழில்,தனது பண்பாடு,
தனது கலாச்சாரம்,
இவற்றை எல்லாம்
கேவலமா நினைத்து
அடுத்தவர்களுடையதை பெருமையா நினைக்கும் வரை நாம் தோற்கடிக்கப்பட்டவர்களே!,

அதுவும் அடுத்தவர்களிடம் அடைக்கலம் புகுபவர்கள் உயிருடன் நடமாடினாலும் உயிரற்றவர்களே!
தனதையும் பெருமையா நினைத்து,

அடுத்தவர்களுடையதையும் மதித்து,
அவர்களுக்கு இணையா தனதையும் தரம் உயர்த்தி,
வாழ்பவனே!!!!
"உண்மையான வெற்றி அடைந்தவன்".

ஆனால்,
உணர்வற்ற உருவங்கள்தான் இன்று அதிகம் உலா வருகின்றன.