இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பண்பட்டவர்களாக இருந்தால் தான் அந்த சமூகம் ஒரு பண்பட்ட சமூகமாக இருக்கும்.ஆனால் சமூகத்தில் பண்படாதவர்களும், சமூகத்தில் சீர்கேடுகளை உண்டாக்குபவர்களும் தான் கீழ்மட்டவர்களாக கருதப்படுவார்கள். இதில் ஜாதி பாகுபாடுகள் இல்லை. இந்த நிலை மாறி அனைவரும் பண்பட்டவர்களாக இருந்தால் தான் அந்த சமூகம் பண்படும். இப்படி ஒரு பண்பட்ட சமூகம் வேண்டுமெனில் அது கல்வியால் மட்டுமே முடியும்.'கல்வி' என்பது இன்று இருக்கிற பணியாளர்களை உருவாக்கும் கல்வி இல்லை.இப்படி கீழ்மட்டவர்களை உண்மையான கல்வியின் மூலம் பண்பட்டவர்களாக மாற்றி ஒரு பண்பட்ட சமூகத்தை,சமநிலை சமூகத்தை,உண்டாக்குபவர்கள் தான் உண்மையான தலைவர்கள்.அனால் இன்று உள்ள தலைவர்களோ பண்பட்டவர்களையும் கீழ்மட்டவர்களாக மாற்றி ஒரு சீர்கெட்ட சமநிலை சமூகத்தை உருவாக்குகிறார்கள்,சமூகத்தில் சீர்கேடுகளை உருவாக்குபவர்களை ஆதரிகிறார்கள்,இதை தான் கீழ்மட்டவர்களுக்காக போராடுகிறோம் என்கிறார்கள்,
