அழகு செல்கள் கலை இழக்கின்றன ,
உதடு செல்கள் உயிர் இழக்கின்றன ,
சுவாச செல்கள் சுகம் இழக்கின்றன ,
எதனையும் அறியாமல் போதை மயக்கத்தில்
மூளை செல்கள்.
கரிக்கலன்களாக மாறி போன
நுரையீரல் நுண்அறையில் ஆவலுடன் தேடுகிறது
இரத்த சிவப்பணுக்கள்
ஆக்ஸிஜன் அணுக்களை .
தினமும் சிதைக்கப்படும் செல்கள்,
இறுதியில் போராட்டத்தில் இறங்குகின்றன
அளவுக்கு அதிகமான செல்களை உருவாக்கி!!!
போராடும் செல்கள்தான் புற்று நோய் – என்று,
அறியாமல் உயிரின் அழிவில்,
சாம்பல் புகையின் சுகத்தில்,
சில ஆறறிவு உயிர்கள்.

