Thursday, March 29, 2012

பறிகொடுத்த பகுத்தறிவு




மக்களின் 'உழைப்பு'
கோடி கோடிகளாக,
உள்நாட்டில் ஊழல்களாக !
வெளிநாட்டில் பதுக்கல்களாக !

உழைக்கும் 'மக்கள்'
தெருக்கோடியில்,
மாற்று துணி இல்லாமலும் !
மானங்காக்க முடியாமலும் !

இரத்தம் கொதிக்கிறது!
மானங்கெட்ட அரசியல்வாதிகளை,
பார்த்து அல்ல !!

கிரிக்கெட் சூதாட்டத்திலும்,
சமூகத்தை சீர்குலைக்கும் சினிமாவிலும்,
பொழுதுபோக்கு என்று சொல்லி,
சிந்தனையையும் !
பகுத்தறிவையும் !
பறிகொடுத்த,
என் இளைய சமூகத்தை பார்த்து.

Friday, March 23, 2012

இன்பம் துன்பம்

அன்பும்,அன்பானவர்களும் அதிகரிக்க,
அதனுடன்,துன்பமும் தொடர்வதை,
அறிவு இருந்தும்,
அறியமுடியாத,
அன்பான மயக்கத்தில் மனம்.

என்றாவது எதிர்படும் போது,
ஏற்க மறுக்கிறது உடன் வந்த
'துன்பத்தை'.

Friday, March 16, 2012

தாய்ப்பால்




பொருட் தேடலில் புதைந்து போன
மனித சமுகம்,

சுயநல சூறாவளியில் சுழலும்
மனித மனம்,

பலர் வறுமையில் வராமலும்,
சிலர் வசதியில் தராமலும்,
இருக்கும் தாய்ப்பால்.

இன்று மிருகத்தின் மடியை பார்க்கிறது
மனித குழந்தை,

உங்கள் பகுத்தறிவு,
எங்கள் சாத்துக்கு சமம் என்று,
சிரிக்கிறது ஐந்தறிவு உயிர்கள்.