Tuesday, April 10, 2012
Monday, April 9, 2012
Friday, April 6, 2012
இயக்கத்தின் காட்சிகளாக மாற்றங்கள்
கருவறையின் கதவைத்திறந்து,
காலஊர்தியால் கதிரவனை வலம்,
வந்துக்கொண்டிருக்கையில்,
எத்தனை மாற்றங்கள்.
மழலையில் இருந்து மனிதனாக,
அறியாமையல் இருந்து அறிஞராக,
இன்பங்களும், துன்பங்களும்,
வந்தவர்கள் எத்தனைபேர்,
போனவர்கள் எத்தனைபேர்,
மறக்கவேண்டியதை மறந்து,
நினைக்கவேண்டியதை நினைத்து,
நிகழ்ந்துக்கொண்டிருக்கும்,
இந்த மாற்றங்கள் தான்,
இயக்கத்தின் காட்சிகள் என்பதை கண்டு.
உண்மையின் நிழலில் பயணிப்போம்.
Thursday, April 5, 2012
தனித்து வாழ்வோரில் தமிழகம் முதலிடம்
பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்துக்கும்,
பேர்போன
பாரதநாடு.
அதிலும்
விருந்தோம்பலிலும்,
குடும்ப
உறவுகளிலும்,நாகரிகத்திலும்,நந்தவனமாக
இருந்த,
தமிழகம்.
இன்று,
நாற்றம்
அடிக்கிறது மேலைநாட்டுக்
கலாச்சார கழிவுகளால்.
நமது
பண்பாட்டின் மனம் அறியாமல்
பகட்டாய் இருக்கிறது என்று
சாக்கடையில் விழுந்த தமிழ்
மக்கள்.அன்பால்
இருப்பதற்கு கூட எப்படி?
என்று
வகுப்பெடுக்கும் மேலை நாட்டு
கலாச்சாரத்தை தலையில்தூக்கி
வைத்துக் கொண்டிருக்கிறோம்.
மற்றவரிடம்
இருந்து எதை பின்பற்றினாலும்
நல்லதை மட்டுமே பின்பற்ற
வேண்டும்.நம்மிடமும்
சில நல்லவை இருக்கிறது அதை
விடுத்து அப்படியே அடுத்தவர்களை
பின்பற்றகூடாது.
ஏனெனில்
யாரும் நூறு சதவீதம் நல்லர்வர்கள்
இல்லை.
சினிமா, தொலைகாட்சி, மற்ற ஊடகங்கள் போன்றவை,குடும்பம் என்பது இப்படிதான் இருக்க வேண்டும், அனைவருக்கும் மிகைப்படுத்தப்பட்ட சுய கௌரவம் வேண்டும்,சமூகத்தில் சிலவற்றை உயர்வுபடுத்தியும் அவசியமானதை தாழ்வுபடுத்தியும் காட்டுதல், போன்ற போலியான தனிமனித, குடும்ப,சமூக மதிப்பீடுகளை உருவாக்குகின்றன. இன்று ஊடகங்கள் தங்களின் சுயலாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து,மக்களிடத்தில் உள்ள பகுத்தறிவையும் சிந்தனையும் சீரழித்து,பாமரர்களாகவும் ,சிந்திக்க இயலாதவர்களாகவும் மாற்றுகின்றன.மக்களின் பணம்,உழைப்பு,அன்பு,குடும்ப உறவு,தனி மனித சுதந்திரம்,போன்ற அனைத்தும்,கார்பெரடே நிறுவனங்கள் தன் பணப்பேராசையால் சுரண்டப்படுவதை கூட அறிய முடியாத அப்பாவிகளாக ஆக்கப்பட்டுளோம்.
சினிமா, தொலைகாட்சி, மற்ற ஊடகங்கள் போன்றவை,குடும்பம் என்பது இப்படிதான் இருக்க வேண்டும், அனைவருக்கும் மிகைப்படுத்தப்பட்ட சுய கௌரவம் வேண்டும்,சமூகத்தில் சிலவற்றை உயர்வுபடுத்தியும் அவசியமானதை தாழ்வுபடுத்தியும் காட்டுதல், போன்ற போலியான தனிமனித, குடும்ப,சமூக மதிப்பீடுகளை உருவாக்குகின்றன. இன்று ஊடகங்கள் தங்களின் சுயலாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து,மக்களிடத்தில் உள்ள பகுத்தறிவையும் சிந்தனையும் சீரழித்து,பாமரர்களாகவும் ,சிந்திக்க இயலாதவர்களாகவும் மாற்றுகின்றன.மக்களின் பணம்,உழைப்பு,அன்பு,குடும்ப உறவு,தனி மனித சுதந்திரம்,போன்ற அனைத்தும்,கார்பெரடே நிறுவனங்கள் தன் பணப்பேராசையால் சுரண்டப்படுவதை கூட அறிய முடியாத அப்பாவிகளாக ஆக்கப்பட்டுளோம்.
அனைத்து மனித குணங்களையும் மறந்து பணம், காமம், போதை மயக்கம், இந்த முன்று மட்டுமே முதன்மை படுத்தப்படுவதால் தான்,இன்று நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.
நமது தாத்தா, பாட்டி காலத்தில் குடும்ப உறவுகள் சிதையாமல் இருக்க, விட்டுக்கொடுத்து போதல், சகிப்புத்தன்மை,அன்பானவர்களிடம் சுய கௌரவத்தை குறைத்தல், கருணையுடன் நடந்து கொள்ளுதல் ,போன்ற நல்லொழுக்கங்கள் ,கடைப்பிடிக்கப்பட்டன. அன்பையும், கருணையையும் முன்னிலை படுத்தினர். இன்று தான் என்ற எண்ணம் மேலோங்கி, அளவுக்கு அதிகமான சுய கௌரவத்தால், அம்மா அப்பா, கணவன், மனைவி, பிள்ளை போன்றவர்களிடம் கூட சுயகௌரவம், சுய மரியாதை பார்க்கும் சூழல் உள்ளது.அன்பானவர்களிடமே போட்டிகள் நடக்கின்றன. இவை பொறாமையாக மாறி பின் போர்களமாக காட்சியளிகின்றன.
குடும்பம் என்றால் கணவன் வெளி வேலைகள் செய்வதும்(அதாவது குடும்பத்திற்கு பொருள் ஈட்டுவது). மனைவி ஈட்டிய பொருளை நிர்வகிப்பதும், குழந்தைகளை பெற்று வளர்ப்பதும் .இருவரின் செயல்களிலும் எதுவும் தாழ்ந்தது இல்லை, குடும்பத்தின் இயக்கத்திற்கு இரண்டும் அவசியமானவை, இதற்கு ஏற்றார் போல தான் ஆண், பெண் உடல் அமைப்பை இயற்க்கை படைத்துள்ளது. பெண்கள் தான் குழந்தை தான் பெற முடியும் ஆண்கள் பெற முடியாது, பெண்களின் உடல் மென்மையாகவும், ஆண்களின் உடல் கடினமாகவும் இது போன்ற பலவற்றை கூறலாம் .
கணவன் தான் செய்யும் வெளிவேலைகளை உயர்வாக நினைத்து, வீட்டு வேலைகளை அலட்சியபடுத்தி, மனைவியை அடிமை செய்வதும், ஆதிக்கம் செய்வதும்.மனைவி தான் செய்யும் வேலைகளை தாழ்வாக கருதி கணவனுக்கு சமமாக வெளி வேலைக்கு செல்ல நினைத்து அனைத்து வேலைகளுக்கும் ஆணுக்கு பெண் சமம் என்று இயற்க்கைக்கு மாறாக களம் இறங்குதல்.போன்ற தவறான சுய மதிப்பீட்டால் இன்று அவரவர் தனிமை படுத்திக்கொள்கின்றனர்.
கணவனும் மனைவியும் இரண்டு தண்டவாளங்களாகவும் ,தாய் தந்தை தண்டவாளங்களை தாங்கும் கட்டைகளாகவும், குடும்ப உறவுகள் சல்லி கற்களாகவும், மற்ற சமூக உறவுகள் இருப்பக்கமும் நந்தவனமாகவும் ,இருந்தால் தான், வாழ்க்கை என்னும் இரயிலில் இனிமையாக பயணிக்க முடியும், இதில் ஒருவருக்கொருவர் தான் தான் பெரியவர் என்று போட்டிபோட்டால், இரயில் பாதை,மாறிபோன போர்க்களத்தில், எப்படி வாழ்க்கை இரயில் ஓடும்.பிறகு எப்படி இனிமை வரும்.அனைவரும் அனாதைகளாக, நாகரீக நாடோடிகளாக , தான் இருக்க முடியும்.
இன்று அப்படி தான் உள்ளோம் என புள்ளி விவரம் கூறுகிறது.
இந்திய அளவில் கணவன் அல்லது மனைவி இழந்தோர், விவாகரத்து ஆனோர், மற்றும் பிரிந்து வாழ்வோர், பட்டியலில் தமிழகம் முதலிடம். இதை கேட்கும் போது பகுத்தறிவு பயனற்று போய் விட்டதா என்று தோன்றுகிறது.
...............................
...............................சாந்தமூர்த்தி
Subscribe to:
Posts (Atom)


