Sunday, October 6, 2013

வருங்கால சந்ததியே


தொழில்கல்வி படித்தவர்களும், 
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும்,
கலை&அறிவியல் படித்தவர்களும், 
இப்படி லட்சகணக்கான இளைஞர்களுக்கு 
TET,TNPSC,SSC,RRBஎன்று அரசும்,
IT,MNC,CIVIL,AUTOMOBILE என்று தனியாரும், 
வெறும் 40% வேலைவாய்ப்பு தான் மீதம் உள்ள 60% இளைஞர்கள் படுபாடு யார் அறிவர்,

அவர்களை வாழவைக்ககூடிய.
அரசும் ,
முந்தைய தலைமுறையும்,
இந்த சமூகமும்,
இன்றைய கல்விமுறையும்,
அவர்களை
மனநோயாளியாகவும்
தற்கொலை செய்துகொள்பவர்களாகவும். மாற்றி உள்ளது.

பத்தாவது படித்தவன் எதாவது ஒரு தொழில் செய்து லட்சாதிபதியாக இருக்கான்,
பட்டப்படிப்பு படித்தவன் பரதேசியாக இருக்கிறான்,ஏனெனில் இந்த சமூகம் இவனக்கு படித்தவன் என்ற பட்டம் கொடுத்து பைதியகரனாக மாற்றி வைத்துள்ளது.

லட்சகணக்கான இளைஞர்ககள் இவர்கள் செய்த ஒரே தவறு எதற்கும் உதவாத ஏட்டுகல்வியை கற்றதுதான்.
நமது
கல்விமுறையும்,
அரசும்,
அமைதியான முறையில்
வருங்கால சந்ததியே முடவர்களாக மாற்றிக்கொண்டு இருக்கிறது என்பது மட்டும் உண்மை..

வேட்டை சமூகம்

மனிதனை மனிதன் அடித்து வாழும் 
வேட்டை குணம் கொண்ட மனிதன் தான் இன்று, 
திறமை,
வீரம், 
வெற்றி பெற்றவன், 
என்றெல்லாம் அளவிடப்படுகிறது. 
இன்னும், 
முதலாளித்துவம் என்னும் வேட்டை சமூகத்தில் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் மிருகங்களை விட மோசமாக....

உழைப்பை சுரண்டல்

பண்டமாற்று முறையில் இருந்து,
நாணய முறை தோன்றிய அடுத்த நொடி..... 
ஊழலும்,
உழைப்பை சுரண்டலும்,
தோன்றிவிட்டது.

Thursday, October 3, 2013

மனித வாழ்க்கை

நாகரீகம் அடைந்தும் 
நாடோடிகளாக, 

அனைவரும் இருந்தும் 
அனாதைகளாக, 

அறிவியல் வளர்ந்தும் 
ஆடுமந்தைகளாக,

மகிழ்ச்சி அடைந்தும் 
மனநோயாளிகளாக,  

பணம் சம்பாதித்தும் 
பரதேசிகளாக,   

உரிமை இருந்தும் 
ஒடுக்கப்பட்டவர்களாக,

இப்படி
நவீன ஏகாதிபத்தியத்தில்  
நாற்றமடிக்கும் மனித வாழ்க்கை