நாகரீகம் அடைந்தும்
நாடோடிகளாக,
அனைவரும் இருந்தும்
அனாதைகளாக,
அறிவியல் வளர்ந்தும்
ஆடுமந்தைகளாக,
மகிழ்ச்சி அடைந்தும்
மனநோயாளிகளாக,
பணம் சம்பாதித்தும்
பரதேசிகளாக,
உரிமை இருந்தும்
ஒடுக்கப்பட்டவர்களாக,
இப்படி
நவீன ஏகாதிபத்தியத்தில்
நாற்றமடிக்கும் மனித வாழ்க்கை
No comments:
Post a Comment