Thursday, October 3, 2013

மனித வாழ்க்கை

நாகரீகம் அடைந்தும் 
நாடோடிகளாக, 

அனைவரும் இருந்தும் 
அனாதைகளாக, 

அறிவியல் வளர்ந்தும் 
ஆடுமந்தைகளாக,

மகிழ்ச்சி அடைந்தும் 
மனநோயாளிகளாக,  

பணம் சம்பாதித்தும் 
பரதேசிகளாக,   

உரிமை இருந்தும் 
ஒடுக்கப்பட்டவர்களாக,

இப்படி
நவீன ஏகாதிபத்தியத்தில்  
நாற்றமடிக்கும் மனித வாழ்க்கை 

No comments:

Post a Comment