Monday, July 9, 2012

மறையும் அறியாமை



என்னுடைய வார்த்தையை 
என்னாலே மறுக்கப்படுகிறது....

என்னுடைய குறிக்கோள் 
என்னாலே மாற்றப்படுகிறது....

என்னுடைய சிந்தனை 
என்னையே சோதனை செய்கிறது...

ஏனெனில்!
அறிவு வெளிச்சத்தில் 
அறியாமை இருள் மறைந்துகொண்டு  இருக்கிறது.

Tuesday, July 3, 2012

இந்திய விவசாயிகள்



நாட்டை சுரண்டுபவர்களிடத்தில் கடனாளியாக,
நகரத்து அகதிகளாக,
வேறு மாநிலத்தில் அடிமைகளாக,
அல்லது 
சொந்த நிலத்தில் சமாதியாக.
இந்திய விவசாயிகள்,
இந்தியா ஒளிர்கிறது.