கருவறையின் கதவைத்திறந்து,
காலஊர்தியால் கதிரவனை வலம்,
வந்துக்கொண்டிருக்கையில்,
எத்தனை மாற்றங்கள்.
மழலையில் இருந்து மனிதனாக,
அறியாமையல் இருந்து அறிஞராக,
இன்பங்களும், துன்பங்களும்,
வந்தவர்கள் எத்தனைபேர்,
போனவர்கள் எத்தனைபேர்,
மறக்கவேண்டியதை மறந்து,
நினைக்கவேண்டியதை நினைத்து,
நிகழ்ந்துக்கொண்டிருக்கும்,
இந்த மாற்றங்கள் தான்,
இயக்கத்தின் காட்சிகள் என்பதை கண்டு.
உண்மையின் நிழலில் பயணிப்போம்.

No comments:
Post a Comment