Friday, March 22, 2013

சிந்தனை துளி


"நம் மனதை நோகடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் 
நம் எண்ணங்களில் உருவாகி
மற்றவர்கள் மூலமா நம்மை தாக்குகிறது 
அதனால் 
நல்வழிபடுத்துவது 
நமது எண்ணங்களையும், மனதையும் தான்,
அடுத்தவர்களை அல்ல"

"சுயநல சூழ்நிலையில் 
நாமும் சுயநலமா இருந்தாதான் 
சோறு கிடைக்கும் போல"

அண்ணன் என்னடா ! 
தம்பி என்னடா ! 
அவரசமான உலகத்திளே !-70களில் 
பெத்தவங்க என்னடா ! 
பிள்ளையங்க என்னடா ! 
கார்பிரேட் உலகத்திளே ! -இன்று

"உடல் பலவீனமும்"
"மன அழுத்தமும்" - தான் 
வளர்ந்துள்ளது நமது பொருளாதார வளர்ச்சியில்

ஊராரிடம் நல்ல பேர்வாங்க 
உனது வாழ்கையை பணையம் வைக்காதே
கஷ்டப்படுவது நீதான்,ஊரார் இல்லை

அன்பானவர்களிடம் அதிகம் எதிர்பார்கதே 
குறைவது அன்பாக இருந்தாலும் 
விலகுவது நீயாகத்தான் இருப்பாய்

கடந்தகால இன்பங்களின் 
நினைவுகள் தான் உருமாறுகிறது 
நிகழ்காலத்தில் ஆனந்த கண்ணீராக

என்று உடல் உழைப்பு குறைந்ததோ 
அன்றே மன உழைப்பு வளர தொடங்கிவிட்டது

தேவை அதிகமாகி போயிடுச்சி
வாழ்க்கை தொலைஞ்சி போயிடுச்சி

எந்திரங்களோடு பழகிய மனிதன் உறவுகளையும் 
எந்திரமாய் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறான்.

ஒரு இடத்தில் தேவைக்கு அதிகமாகவும் 
ஒரு இடத்தில் தேவைக்கு குறைவாகவும்
இருப்பது இயற்கையாய் உருவான பொருள் மட்டுமல்ல 
மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளும் தான்


No comments:

Post a Comment