Tuesday, November 22, 2011

ஆள்பவர்களின் தந்திரம்



நடைபாதையில் நகர்கிறது வாழ்க்கை பாதை.

சிதைந்து போன உடையில்,

மறைந்துள்ளது-சிதைய போகும் உடல்.


அரசு அரிசியில் இருக்கும்,

அரைகுறைச் சத்தையும்,

எடுத்துக்கொள்கிறது-இரவில் கொசு.


வேதனைகளைகூட தாங்க,

வலிமை இல்லாமல்,

வலிகளுடன் வாழ்கையை வழிநடத்தும்-பெண்கள்.


தனது மனைவி மக்களின்

துயரக்கண்ணீரை

துடைக்காமல் மதுவில் மூழ்கிப்போன ஆண்கள்!


இப்படி?


வதைப்படும் வாக்காளர்களின் எண்ணிக்கையை,

அதிகப்படுத்தினால் தான்!

அடுத்து ஆட்சிக்கு வரமுடியும்.


அனைவருக்கும் அனைத்தும் கொடுத்துவிட்டால்!

ஆள்வது எப்படி?

No comments:

Post a Comment