Thursday, December 29, 2011

மாண்புமிகு மரம்



வாயுக்களின் சரிவிகிதத்தை சமநிலைப்படுத்தி,
பிராண வாயுவை வளப்படுத்தி,
கரியமில வாயுவை கட்டுப்படுத்தி,

வரண்ட காற்றில் ஈரத்தை உண்டாக்கி,
மேகத்தில் மழை வரச்செய்து,

வெயில் காலத்தில் வெப்பத்தை தனித்து,
மழைக்காலத்தில் மண் அரிப்பை தடுத்து,
மண்வளத்தை மேம்படுத்தி,

இயற்கை சக்தியால் அணுக்களை சமைத்து
உயிரினங்கள் உண்ணும் உணவாக மாற்றி!
உயர்திணை ,அஃறிணை,உயிரினங்களை
வாழ வைத்துக் கொண்டிருக்கும் ,

தன்னலமற்ற மரங்களை அழித்துக்கொண்டிருக்கும் .
சுயநலமான மாந்தர்களுக்கு எப்படி தெரியும்?

"அழிவது மரம் இல்லை
அவர்கள் தான் என்று"

No comments:

Post a Comment