Tuesday, December 13, 2011

கல்வியில் கரை சேராத மக்கள்




அறிவு வளர்ச்சியின் அடிப்படையை அறிவுறுத்தாத
ஆரம்பப்பள்ளியில் 'அடிபட்டு',

நல்லொழுக்க நடைமுறைகள் நசுக்கப்பட்ட
நடுநிலைப் பள்ளியில் 'நலிவடைந்து',

உயர் குணங்களின் உண்மையை உணர்த்தாத
உயர்நிலைப் பள்ளியில் 'உணர்வற்று',

மெய்யறிவு மறைந்து போன
மேல்நிலைப் பள்ளியில் 'மதி மயங்கி',

கல்லூரியிலாவது கரை சேரலாம்-என்று
கல்வி கடன் கேட்க,
தேசிய வங்கிக்கு சென்றால்
தேதி சொல்லி அனுப்புகிறார்கள்.

இப்படி,
மனதளவிலும்!
பண அளவிலும்!
என்றும்,
கரை சேராத
கடை நிலை மக்கள். 

No comments:

Post a Comment