சுயநலத்தால்
சுருங்கி போனது
"சிந்தனை
வட்டம்"
உறவுகளையும்
உருக்குலையா வைக்கிறது
சுருங்கிய
வட்டத்தில் -
மனம்.
சிறிய
மனதிற்குள் செல்ல முடியாமல்
சிதறுகிறது
-
நல்ல
குணம்.
உள்ளிருக்கும்
தீய குணம் பிறரை
வருந்த
செய்கிறது தினம்.
வருந்தியவன்
வஞ்சனையில்லாமல் தண்டிக்கிறான்
தீய
குணத்தை பெற்றுக் கொண்டு!
மனிதர்களாலே
மாண்டுவிடப் போகிறது!
"மானிட சமுதாயம்"

No comments:
Post a Comment