Thursday, December 1, 2011

ஏழை விவசாயிகள்






நாங்கள் உழைத்து விளைவித்த பொருளை
எங்களால் விலை கூற முடியாமல், 

ஏமாறும் - 'எழுத்தறிவற்றவர்கள்'.

விளைநிலத்தை வீட்டு மனைகளாக்க,

பதவியை பயன்படுத்தி பாதிவிலைக்கு ,
வாங்குபவர்கள் - 'பகுத்தறிவாளர்கள்', 
நாங்கள் - 'படிப்பறிவற்றவர்கள்'

நகரத்தை நோக்கி நகர்த்தப்படும்
'அடிமைகள்', 

என்றும் எல்லோருக்கும் உழைத்துக் கொடுக்கும்
'உழைப்பாளிகள்', 

ஏனெனில்
நாங்கள் "ஏழை விவசாயிகள் ”.

No comments:

Post a Comment