ஐந்து வருடம் பொது சொத்தின் சுகத்தை,
அனுபவித்துக் கொண்டும்!
அபகரித்துக் கொண்டும்!
ஆட்சி
முடிந்ததும் ஆயத்தமாகிறது.
அனைத்துக்
கட்சிகளும்,
தேர்தல்
நேரத்தில் மட்டும்,தெருத்தெருவாக,
திரிகிறார்கள்
தயக்கமின்றி தலைவர்கள்.
தேர்தல்
விளம்பரப்பலகையில்
,
,
வரைகிறார்கள்,
வெட்கமில்லாமல்.
வருந்துகிறது,
வார்த்தைகள்.
சாலைகளில்
ஒலிக்கிறது,
ஒலிபெருக்கி.
தவிக்கிறது
தமிழ்மொழி-இதுதானா
தமிழ்
வளர்க்கும் முறை.
தேர்தல்
முடிந்ததும் தொடர்கிறார்கள்,
அவரவர்
வேலைகளை,
ஏமாறும் மக்கள்!
ஏமாற்றும்
தலைவர்கள்!

No comments:
Post a Comment