Sunday, December 18, 2011

தேர்தல் கலவரம்


ஐந்து வருடம் பொது சொத்தின் சுகத்தை,

அனுபவித்துக் கொண்டும்!

அபகரித்துக் கொண்டும்!

ஆட்சி முடிந்ததும் ஆயத்தமாகிறது.

அனைத்துக் கட்சிகளும்,


தேர்தல் நேரத்தில் மட்டும்,தெருத்தெருவாக,

திரிகிறார்கள் தயக்கமின்றி தலைவர்கள்.


தேர்தல் விளம்பரப்பலகையில்
,
வரைகிறார்கள், வெட்கமில்லாமல்.

வருந்துகிறது, வார்த்தைகள்.


சாலைகளில் ஒலிக்கிறது, ஒலிபெருக்கி.

தவிக்கிறது தமிழ்மொழி-இதுதானா

தமிழ் வளர்க்கும் முறை.


தேர்தல் முடிந்ததும் தொடர்கிறார்கள்,

அவரவர் வேலைகளை,


ஏமாறும் மக்கள்!

ஏமாற்றும் தலைவர்கள்!

No comments:

Post a Comment