Thursday, December 1, 2011

மாறாத மாற்றம்






அன்று உயிராய் இருந்தது-இன்று,
சாதாரண உணர்வுகள்.

இன்று நெருக்கமாக இருப்பது-நாளை,
சுகமான நினைவுகள்.

மனமும் குணமும் மட்டும் மாறுவதில்லை,
மாறக்கூடிய அனைத்தும் மாறுகிறது.

வந்த பாதையை பார்த்தால்,
குழப்பத்துடன் தெரிகிறது,
வருங்கால பாதை.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில்,
வளர்கிறது!
மாற்றங்களின் வேகமும்,
மறக்கும் குணமும்,

அன்று தலைமுறை இடைவெளியில் தவித்தது.
இன்று ஒரே தலைமுறையில்,
வருட இடைவெளியில் வருந்துகிறது.

வெவ்வேறு நிலைகளில்,
நிலை மாறும் மனங்கள்.
நிலை மாறும் உலகில்.

No comments:

Post a Comment