Monday, December 12, 2011

இறைவனின் சமநிலைக் கோட்பாடு




தாவர எண்ணிக்கையை சமநிலைப்படுத்த,
தாவர உண்ணிகளை படைத்தான்.

தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்த,
மாமிச உண்ணிகளை படைத்தான்.

மாமிச உண்ணிகளின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்த,
மனிதர்களை படைத்தான்.

மனிதர்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்த,
அவர்களுக்கு ஆசை என்னும் ஆறாம் அறிவை கொடுத்தான்.

சமநிலைப்படுத்த துவங்கியுள்ளோம்,
ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு.

இயற்கை என்னும் இறைவனின் சமநிலைக் கோட்பாட்டின்,
இறுதி நிலையில் இருக்கிறோம்.

No comments:

Post a Comment