Thursday, December 8, 2011

இந்தியா ஒளிர்கிறது




சிதைந்து போன குடும்ப உறவுகள்,
விலைபோன எல்லா மனித உணர்வுகள்,

பன்னாட்டு நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்ட
இளைய தலைமுறையினரின் வாழ்க்கை,

நகரத்து அகதிகளாக உருமாறிய உழவர்கள்,
மலடுகளாக மாறிய விவசாய நிலம்,

அடிமைகளாக்கப்பட்ட அடித்தட்டு மக்கள்,
கானல் நீராய் காட்சியளிக்கும் கல்வி,

நஞ்சாக மாறும் நீர் நிலைகள்,
நோய் உற்பத்தியின் வேகம் நொடிகளில்,

இப்படி,

இந்தியா ஒளிர்கிறது,
அறிவு மிகுந்த அரசியல்வாதிகளின்
பொருளாதாரக் கொள்கைகளில்.  

No comments:

Post a Comment