கதிரவன்
கண் விழித்ததும்,
வயல்
வேலையில் கணவனும்.
சமையல்
வேலையில் மனைவியும்.
பின்பு,
இளங்
காலைப் பொழுதில்,
இதமான
மர நிழலில்,
வயகாட்டு
வரப்பில்,
வாய்க்கால்
நீர் ஓசையில்,
பனி
படர்ந்த புல் விரிப்பில்,
வாழை
இலை விரித்து,
காலை
உணவை,
அன்பகாவும்
அமைதியாகவும்,
அனுபவித்த
விவசாய,
கணவனும்
மனைவியும்.
இன்று,
ஆளுக்கொரு
வெளிநாட்டு நிறுவனங்களில்,
கடமைக்கு
உண்ணும் காலை உணவு.
இன்னும்
சொல்ல,
இடம்
இல்லை.

No comments:
Post a Comment