Tuesday, December 27, 2011

உருக்குலையும் உறவுகள்





மரம் வேரை நம்பாமல்
விதைக்கிறது விழுதுகளை-அது
தவிக்கிறது,தரையை தொட்டால்
தாழ்ந்து விடுவோமா-என...

முட்டி மோதி முளைக்கிறோம்
வெட்டி விடுவார்களா-என....

எண்ணங்களின் போர்க்களத்தில்
ஏமாற்றப்படுவோமா-என....

சந்தேக சகதியில்
சுடாத செங்கல்லில்
கட்டப்பட்ட கௌரவம்,
சரித்திரம் படைக்க நினைக்கிறது.

விட்டு கொடுக்க முடியாத
கனவு கோட்டை,
வெட்டி எரியப்பட்டு,
வெளியேற்றப்படும் உறவுகள். 

No comments:

Post a Comment