Wednesday, December 14, 2011

நீர்த்துப் போன நீர் வளம்






புனித நதியில் நீராடினால்!
தீராத நோயும் தீரும்-அன்று.
வராத நோயும் வரும்-இன்று.

முன்னோர்கள் கொடுத்துப்போன
நீர் வளத்தை,
முழு நேரமும் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்
தொழில் வளத்தால்.

மேம்பாடு அடைந்த மனித வளத்தால்,
படும்பாடு அடைந்ததுள்ளது நீர் வளம்.

இப்படி,
வளங்களை வீணடித்து
வஞ்சனையுடன்,
வரவேற்கிறோம்
வருங்கால-சமுதாயத்தை.

No comments:

Post a Comment