Friday, December 2, 2011

மாறவேண்டிய மனிதர்கள்




வறுமையை விரட்டுவது போல்
வசை பாடி....!

துன்பத்தை துடைப்பது போல்
துதி பாடி....!

ஆன்மீகத்தை அசிங்கப்படுத்தி!!
காவி உடையை களங்கப்படுத்தி!!

முற்றும் துறந்தவனை போல் முக்காடு போட்டு
முடிந்தவரை சுரண்டிக் கொண்டு,

கடவுள் என்று கபட நாடகத்தில்
நடித்துக் கொண்டிருக்கும்,
நயவஞ்சக "சாமியார்கள்”.

மற்றும்,

இறை நம்பிக்கையில் ஏமாறும்
இன்றைய "மனிதர்கள்”.

யாரை மாற்றுவது???




No comments:

Post a Comment