நகரத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கை இன்னும் சுதந்திரம் அடையாமல் அடிமைபட்டுகொண்டிருகிறது முதலாளிகளிடமும், அதிகாரவர்கமிடமும், வாடகை வீட்டில் தான் தங்க வேண்டும்,அந்த வீட்டின் முதலாளி விதிக்கும் கட்டுபாடுகள் கொஞ்சம் இல்ல,சாப்பிடுவது முதல் கழிப்பறை செல்வது வரை.சத்தமாக சிரித்து பேசக்கூடாது,நண்பர்கள் வரக்கூடாது,இரவு 9மணிக்கு மேல் வரக்கூடாது இதற்கு பயந்தே ஊரில் இருந்துநள்ளிரவில் வந்தாலும் பேருந்து நிலையத்திலே தங்கி விடிந்ததும் வருகிறார்கள், வயிற்றுக்கு இல்லைஎன்றாலும் வாடகை கொடுக்க வேண்டும்,இப்படி எல்லாம் இருந்தால் தான் இருக்க முடியும்.இல்லை எனில் வீடு காலி பண்ணவேண்டும்.வேலை செய்யும் நிறுவனத்தில் அதைவிட மேல் அங்கு மனிதர்களாக இருக்ககூடாது எந்திரமாக இருக்கவேண்டும் அவர்கள் இடும் கட்டளைகளை அப்படியே செய்ய வேண்டும் அதுதான் ஒழுக்கம்,கொடுக்கும்கூலியை வாங்கிக்கொள்ள வேண்டும் அதுதான் அடக்கம்,தவறு அவர்கள் மேல் இருந்தாலும் நாம் எதுவும் கேட்கக்கூடாது அதுதான் நேர்மை,நமது சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து நிறுவனத்துக்கு நமது வாழ்கையை அற்பணிக்க வேண்டும் அதுதான் உண்மை,இப்படி அனைத்து நல்ல குணங்கள் இருந்தால் தான் வேலை,சம்பளம்.இல்லை எனில் வேலை விட்டு நீக்கிவிடுவார்கள்.
ஏற்றுமதி நிறுவனங்கள்,கார்மெண்ட்ஸ் மற்றும் பெரிய வணிகவலாகங்களில் பணிப்புரியும் பெண்களின் கஷ்டங்கள் எண்ணிலடங்காது,8மணி நேரம் ஓய்வே இல்லாமல் வேலைசெய்ய வேண்டும்,மரபணுவில் மாற்றம் ஏற்படும் அளவுக்கு முதலாளியை கண்டால் பயம்,கண்ணீர் சிந்துவதற்கு கூட கண நேரம் தான்,நம் நாட்டில் ஆயுள் கைதி அனுபவிக்கும் துன்பத்தை விட இவர்களின் துன்பம் அதிகம்,இவர்களை பற்றி சொல்ல இன்னொரு கட்டுரை வேண்டும்.இத்தகைய பெண்கள் நவீன கொத்தடிமைகள்.
அடுத்து சாப்பாடு, ரூமில் மண்ணெண்ணெய் அடுப்பு அல்லது மின்சார அடுப்பு இவற்றை கொண்டு,ஏதோ ஒரு பொருளை வேகவைத்து ருசிக்காக உண்ணாமல் பசிக்காக உண்டு வாழ்கிறார்கள்.ஹோட்டலுக்கு போனால் பணத்தை பிடுங்கி விடுவார்கள்,அப்புறம் அடுத்த நாள் சாப்பிட முடியாது.தினமும் காலை வேளையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் இந்த சாப்பாட்டையும் சாப்பிட நேரம் இல்லாமல் கடமைக்கும் உண்ணுகிறார்கள். அதிலும் சிலர் காலை உணவே உண்ணுவது இல்லை.
தினமும் வேலை முடிந்து இரவு நேரத்தில் தான் பெற்றோர்களிடத்தில் போன் பேசமுடியும் அதிக நேர வேலை என்றால் அதுவும் இல்லை ஞாயிற்று கிழமையில் தான். தனக்கு எதாவது உடல் நலம் சரியில்லை என்றாலும் கவனிக்க யாரும் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பார்கள்.நண்பர்கள் கவனித்து கொள்வார்கள் இருந்தாலும்,அவர்களும் வேளைக்கு செல்லவேண்டும்.இறுதியில் தனியாக தான் சுதாரித்துக்கொல்ல வேண்டும்.இதே கதி தான் ஊரில் உள்ள பெற்றோர்களுக்கும்.சில மாதத்திற்கு ஒருமுறை அல்லது பண்டிகை காலங்களில் தான் ஊருக்கு போவார்கள் ஏனெனில் அப்பொழுது தான் மூன்று,நான்கு, நாள் விடுமுறை கிடைக்கும்.ஊரில் உள்ள பெற்றோர்,தம்பி,தங்கை,மனைவி இவர்களுக்கு புதிய துணிமணிகளை எடுத்துக்கொண்டு போவார்கள்,அங்கு அவர்களும் ஆசையுடன் காத்திருப்பார்கள்.இது போன்று அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதால் போதிய பேருந்து,ரயில்,வசதி இல்லாததால் பலர் கூட்டத்தில் இடம் கிடைக்காமல் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும்,ஊரில் உள்ளவரின் ஏக்கத்திலும்,எதிர்பார்ப்பிலுமே,அடுத்த நாள் பண்டிகை முடிந்துவிடும்.இன்னும் சிலர் ரயிலின் கழிவறை மற்றும் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டும்.பஸ்சில் கூட்ட நெரிசலில் கால் முட்டிஎலும்புகள் மறுத்துக்கொண்டு நின்று செல்லவேண்டும்.பின் இரண்டொரு நாளில் திரும்ப வரவேண்டும் இல்லை எனில் சம்பளம் பிடித்துகொள்வார்கள்.வரும்பொழுது பெற்றோர்கள், பிள்ளைகள், இருவரின் மனதிலும் பிரிவு,அன்பு,பாசம்,அனைத்தும் ரணங்களாக மாறி மறுத்து போகிறது மனங்கள்.
அடுத்து அரசு,விவசாயம்,சுயதொழில்,கால்நடை வளர்ப்பு,சில்லறை வணிகம்,சிறுதொழில்,போன்றவற்றை நவீன படுத்தி,மேம்படுத்தி,படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல்,இருக்கிற அரசுதுறைகளையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள துறைக்கு பணியாளர் தேர்வு என்று சொல்லி அலைய விடுகிறார்கள் இளைஞர்களை கூட்டம்கூட்டமாக . 2000பேர் தேவை என்றால் 1000000பேர் விண்ணப்பம் போடுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 2000பேரை சொல்லி மீதி உள்ள 998000பேரின் நிலைமையை மறைத்து பழியையும் அவர்கள் மேலேயே போட்டுக்கொள்ளும்படி ஒரு தந்திரத்தை கையாளுகிறது தனியார் மையமாக்கப்பட்ட அரசு துறை.இத்தகைய இளைஞர்களின் வாழ்க்கை அரசு வேலைக்கு காத்திருப்பதிலேயே முடிந்து விடுகிறது.இவர்களை வைத்து,பயிற்சி மையங்கள் என்றும், பயிற்சி புத்தகங்கள் என்றும்,பணம் சம்பாதிக்கும் கூட்டம் வேறு.இப்படி அரசு வேலைக்காக அனைத்தையும் இழந்து வறுமையில் வாடுகின்றனர்.எத்தனையோ திறமைகள் இருந்தும் அரசு வேலை தான் உயர்வு என்று எண்ணி அத்தனையும் அடிப்பட்டு போகிறது.இது கிராமத்தில்தான் அதிகம்.
அடுத்து வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்களின் நிலை இதை விட பரிதாபம்.கிராமத்தில் இருக்கிற சொற்ப நிலம்,வீடு,இவற்றை விற்றுவிட்டு நகரத்திற்கு பிழைக்கபோய் அங்கு படும் அல்லல்கள் கொஞ்சநஞ்சம் இல்ல.தங்க இடம் இல்லாமல் எதாவது ஒரு நடைமேடையில் விளம்பர பேனர்களில் கூடாரம் அமைத்து கொண்டும்,சாக்கடை போன்ற ஒதுக்குபுறத்தில் குடிசை போட்டுக்கொண்டும் வாழ்கிறார்கள்.வசதி படைத்த வள்ளல்களின் பழைய துணி தான் இவர்களின் உடை,குப்பையில் போடுவதிருக்கு முந்திய நிலை உள்ளது தான் இவர்களின் உணவு.வருமானத்திற்கு,பெண்கள் அருகில் உள்ள,தன் சுய வேலையை செய்வதற்கு கூட சோம்பல்படும் பணம் வைத்திருப்போர் வீடுகளில் வேலை செய்வார்கள்.ஆண்கள்,கட்டிட வேலை,குப்பை அள்ளுதல்,சுமை தூக்குதல்,மனித கழிவு செல்லும் குழாய் மற்றும் தொட்டிகளை சீர் செய்தல்,போன்ற வேலைகளை செய்கின்றனர்.இவர்களின் குழந்தைகளும் இதேகதிதான்.இது போன்றவர்களுக்கு கிராமம்,நகரம் இரண்டும் சொந்தம் இல்லை,
சொந்த நாட்டிலே அகதிகளாக வாழ்கிறார்கள்.இப்படியும் வாழ விடுவதில்லை ஆளும் வர்க்கங்களும்,வசதிபடைத்தவர்களும்.ஒதுக்கு புறத்தில் தங்கி இருந்தாலும் ஆயிரெத்தெட்டு முறை அவர்களின் குடிசைகளுக்கு தீ வைத்து துரத்துகிறார்கள் மற்றும் அடிமை படுத்துகிறார்கள்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வராத ஏழை மக்கள் விவசாய வேலைகளை செய்தோ,குத்தகை முறையில் விவசாயம் செய்தோ,தரமான உணவு உண்டு,உழைத்து ஆரோகியமாக வாழ்ந்து வந்தார்கள்.ஆனால் இன்று மத்தியஅரசின் 100நாள் வேலை திட்டத்தின் மூலம் வறுமையை போக்குகிறோம் என்று உழைக்காமல் சோம்பேறிகளாக மாற்றப்பட்டும்,மாநில அரசு 1ரூபாய்க்கு கெட்டுபோன அரிசியை கொடுத்து மற்ற பொருட்களை வாங்க முடியாத விலைக்கு கொண்டுபோய் நோயாளியாக மாற்றப்பட்டும்,
"உயிர் காப்பிடு" என்ற திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளை சம்பாதிக்க வைத்துள்ளனர்.இதுபோக கையில் இருக்கிற அஞ்சி பத்தையும் டிவி,செல்போன்,மூலம் போலி ஆசை ஏற்படுத்தி கார்பிரெட் நிறுவனங்கள் பிடுங்கி கொள்கிறார்கள்.இன்னும் பல ஆண்களின் உழைப்பில் முக்கால்வாசி டாஸ்மார்க்கில் வீணாகிறது,முதலில் கஷ்டத்துக்கு குடிக்க பழகி பின் பைத்தியமாக மாறுகிறது.
ஆட்சியில் இருப்பவர்கள் இவர்களை கண்டுகொள்வதே இல்லை,ஆனாலும் ஆட்சியில் அமர்வதற்கு அதிக எண்ணிகையில் இருக்கும் இவர்களின் ஒட்டு தேவை,இதனால் தான் தேர்தல் சமயத்தில் மட்டும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை கவருவதர்க்காக அத்தனை நாடகங்களும் நடத்துகிறார்கள்.தமிழ்நாடாவது பரவாயில்லை எவ்வளவு அல்லல்பட்டாலும் குடும்ப உறவுகள் களைவது குறைவாய் உள்ளது வட இந்தியர்கள் பாதிபேர் ஏழைகள்தான் அவர்களுக்கு குடும்பம்,உறவுகள்,அன்பு,ஆதரவு,போன்ற எதுவும் இல்லை சாப்பாடு போட்டால் போதும் எல்லா வேலைகளும் செய்வார்கள்.இன்று சென்னை,கோவை,போன்ற தமிழக பெருநகரங்களில் ஓட்டல்கள்,கட்டி வேலைகள்,மேம்பால பணிகள்,போன்றவற்றில் அவர்கள்தான் வேலை செய்கிறார்கள்.
இவ்வாறு வறுமை,பயம்,பசி,அடிமை தனம்,தாழ்வு மனப்பான்மை, போன்றவற்றால் இவர்களுக்கு குடும்பம், திருமணம், குழந்தை, பாசம், அன்பு, எல்லாம் வெறுத்துபோய் மறுத்துபோன மனமாக,சிதைக்கப்பட்ட மனிதனாக வயிற்று பிழைப்புக்காக மட்டும் வாழ்கிறார்கள்.தனிமையில் மனித குணங்கள் இல்லாமல் எந்திரம் அல்லது மிருகம் போல் வாழ்கிறார்கள். இப்படி தான் அடிமை வர்க்கம் வளர்க்கப்படுகிறது
இதற்கெல்லாம் கரணம் யார்?
இந்தியர்கள் அனைவரிடமும் பரவி இருந்த பொருளாதாரத்தை மேற்கத்திய கலாச்சாரப்படி உலக மையம்,தாரள மையம்,தனியார் மையம்,போன்ற பொருளாதார கொள்கையின் மூலம் அனைத்தையும் ஒரு சிலரிடத்தில் குவித்து மற்ற அனைவரையும் தொழிலாளர்களாக மாற்றி,நுகர்வு கலாச்சாரத்தை ஏற்படுத்தி தவிக்கவிட்டு,நாட்டின் அடிப்படையான விவசாயம்,கல்வி,சுகாதாரம்,போன்ற அனைத்தையும் தனியார் மையமாக்கிய பொருளாதார மேதைகளின் அறிவாற்றல் தான் .உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது,இந்தியாவில் பதிப்பு இல்லாமல் இருந்ததற்கு அவர்களின் பொருளாதார கொள்கை இல்லை,அவர்களின் கொள்கையாலும் மாறாத பலரின்,நமது கலாசார,குடும்ப பொருளாதாரத்தால் தான் என்று எப்படி தெரியும்.மேலைநாட்டு முறையில் பொருளாதாரம் படித்த தலைவர்களுக்கு.
சொந்த நாட்டிலே அகதிகளாக வாழ்கிறார்கள்.இப்படியும் வாழ விடுவதில்லை ஆளும் வர்க்கங்களும்,வசதிபடைத்தவர்களும்.ஒதுக்கு புறத்தில் தங்கி இருந்தாலும் ஆயிரெத்தெட்டு முறை அவர்களின் குடிசைகளுக்கு தீ வைத்து துரத்துகிறார்கள் மற்றும் அடிமை படுத்துகிறார்கள்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வராத ஏழை மக்கள் விவசாய வேலைகளை செய்தோ,குத்தகை முறையில் விவசாயம் செய்தோ,தரமான உணவு உண்டு,உழைத்து ஆரோகியமாக வாழ்ந்து வந்தார்கள்.ஆனால் இன்று மத்தியஅரசின் 100நாள் வேலை திட்டத்தின் மூலம் வறுமையை போக்குகிறோம் என்று உழைக்காமல் சோம்பேறிகளாக மாற்றப்பட்டும்,மாநில அரசு 1ரூபாய்க்கு கெட்டுபோன அரிசியை கொடுத்து மற்ற பொருட்களை வாங்க முடியாத விலைக்கு கொண்டுபோய் நோயாளியாக மாற்றப்பட்டும்,
"உயிர் காப்பிடு" என்ற திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளை சம்பாதிக்க வைத்துள்ளனர்.இதுபோக கையில் இருக்கிற அஞ்சி பத்தையும் டிவி,செல்போன்,மூலம் போலி ஆசை ஏற்படுத்தி கார்பிரெட் நிறுவனங்கள் பிடுங்கி கொள்கிறார்கள்.இன்னும் பல ஆண்களின் உழைப்பில் முக்கால்வாசி டாஸ்மார்க்கில் வீணாகிறது,முதலில் கஷ்டத்துக்கு குடிக்க பழகி பின் பைத்தியமாக மாறுகிறது.
ஆட்சியில் இருப்பவர்கள் இவர்களை கண்டுகொள்வதே இல்லை,ஆனாலும் ஆட்சியில் அமர்வதற்கு அதிக எண்ணிகையில் இருக்கும் இவர்களின் ஒட்டு தேவை,இதனால் தான் தேர்தல் சமயத்தில் மட்டும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை கவருவதர்க்காக அத்தனை நாடகங்களும் நடத்துகிறார்கள்.தமிழ்நாடாவது பரவாயில்லை எவ்வளவு அல்லல்பட்டாலும் குடும்ப உறவுகள் களைவது குறைவாய் உள்ளது வட இந்தியர்கள் பாதிபேர் ஏழைகள்தான் அவர்களுக்கு குடும்பம்,உறவுகள்,அன்பு,ஆதரவு,போன்ற எதுவும் இல்லை சாப்பாடு போட்டால் போதும் எல்லா வேலைகளும் செய்வார்கள்.இன்று சென்னை,கோவை,போன்ற தமிழக பெருநகரங்களில் ஓட்டல்கள்,கட்டி வேலைகள்,மேம்பால பணிகள்,போன்றவற்றில் அவர்கள்தான் வேலை செய்கிறார்கள்.
இவ்வாறு வறுமை,பயம்,பசி,அடிமை தனம்,தாழ்வு மனப்பான்மை, போன்றவற்றால் இவர்களுக்கு குடும்பம், திருமணம், குழந்தை, பாசம், அன்பு, எல்லாம் வெறுத்துபோய் மறுத்துபோன மனமாக,சிதைக்கப்பட்ட மனிதனாக வயிற்று பிழைப்புக்காக மட்டும் வாழ்கிறார்கள்.தனிமையில் மனித குணங்கள் இல்லாமல் எந்திரம் அல்லது மிருகம் போல் வாழ்கிறார்கள். இப்படி தான் அடிமை வர்க்கம் வளர்க்கப்படுகிறது
இதற்கெல்லாம் கரணம் யார்?
இந்தியர்கள் அனைவரிடமும் பரவி இருந்த பொருளாதாரத்தை மேற்கத்திய கலாச்சாரப்படி உலக மையம்,தாரள மையம்,தனியார் மையம்,போன்ற பொருளாதார கொள்கையின் மூலம் அனைத்தையும் ஒரு சிலரிடத்தில் குவித்து மற்ற அனைவரையும் தொழிலாளர்களாக மாற்றி,நுகர்வு கலாச்சாரத்தை ஏற்படுத்தி தவிக்கவிட்டு,நாட்டின் அடிப்படையான விவசாயம்,கல்வி,சுகாதாரம்,போன்ற அனைத்தையும் தனியார் மையமாக்கிய பொருளாதார மேதைகளின் அறிவாற்றல் தான் .உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது,இந்தியாவில் பதிப்பு இல்லாமல் இருந்ததற்கு அவர்களின் பொருளாதார கொள்கை இல்லை,அவர்களின் கொள்கையாலும் மாறாத பலரின்,நமது கலாசார,குடும்ப பொருளாதாரத்தால் தான் என்று எப்படி தெரியும்.மேலைநாட்டு முறையில் பொருளாதாரம் படித்த தலைவர்களுக்கு.
இவற்றை எல்லாம் மாற்ற இளைஞர்களால் தான் முடியும்,அனால் இன்று உள்ள இளைஞர்களிடையே சுயநலத்தை உண்டாக்கி தன்னை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு,பொதுநல சிந்தனை இல்லாமலும்,ஒன்று சேரமுடியாமலும்,மாற்றி வைத்து உள்ளனர்.இதையும் மீறி சிந்திப்பவர்களை அடுத்த வேலை சாப்பாடு கிடைக்காமல்,அடிமட்ட நிலைக்கு செல்ல வேண்டும் என்று நவீன கணக்கீடுகள் வகுத்துள்ளனர்.இப்படி பிரித்தாளும் கொள்கை மூலம் தான் முதலாளி வர்க்கம் நமது உழைப்பில் வாழ முடியும்.எனவே சிந்தியுங்கள் இளைஞர்களே!,நாம் அனைவரும் சமுகம் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கப்பலை பற்றியும் சிந்திக்காமல் தன்னை பற்றி மட்டும் சுயநலத்துடன் சிந்தித்து கொண்டிருந்தால், கப்பல் செல்லும் திசை தெரியாமல்,முட்டி மோதி மூழ்கினால் அழிவது கப்பல் அல்ல நாமும் தான்.இன்று மனித சமுக கப்பல் மூழ்கும் நிலைக்கு சென்றுகொண்டிருகிறது இவற்றை வழிநடத்த தன்நலமற்ற ஒரு தலைவர்கள் வந்தால் போதாது,பல பேர் வரவேண்டும். வாருங்கள்.

No comments:
Post a Comment