பயன்படுத்த முடியாதபடி நீரை மாசுபடுத்தி
சுத்திகரிக்கும் எந்திரத்தை கண்டுபிடிப்பதுதான்,
-அறிவியல் வளர்ச்சியா ?
எந்த உணவு பொருட்களும் விளையாதபடி நிலத்தை மாற்றி
மரபணுமாற்று பயிர்களை கண்டுபிடிப்பதுதான்,
-அறிவியல் வளர்ச்சியா?
புவி வெப்பநிலை அதிகரிக்கும் அளவு காற்றை மாசுபடுத்தி வெள்ளத்தடுப்பு,வறட்சிநிவாரண முறைகளை கண்டுபிடிப்பதுதான்,
-அறிவியல் வளர்ச்சியா?
இப்படி வளர்ச்சி என்றபெயரில்
அறிவியலை மறுசுழற்சி இல்லாமல் பயன்படுத்துவதால்
மனித இனம் மறுமலர்ச்சி இல்லாமல் மாண்டு போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
No comments:
Post a Comment